TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 2 , 2019 1995 days 1362 0
  • சமீபத்திய தரவரிசைப்படி, மத்திய அரசின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரம் (Deendayal Antyodaya Yojana-National Urban Livelihoods Mission - DAY-NULM) என்ற சுயவேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழ்நாடு 18-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 27 மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசமும் குஜராத்தும் முதல் இரு இடங்களை வகிக்கின்றன.
    • கடந்த வருடம் இதே பிரிவில் தமிழ்நாடு 4-வது நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
  • இந்தியக் கடற்படையின் 75(I) என்ற திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரித்திட பாதுகாப்பு கொள்முதல் குழு (Defence Acquisition Council  - DAC)  ஒப்புதல் அளித்திருக்கின்றது.
  • தேசிய மாணவர் படையின் இயக்குநர் ஜெனரலாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா பதவியேற்றுள்ளார்.
  • புதுதில்லியில் நொய்டாவில் தேசிய அருங்காட்சியக கல்வி நிலையத்திற்கான புதிய வளாகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரால் திறந்து வைக்கப்பட்டது.
  • இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சியின் 3-வது பதிப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி துவக்கி வைக்கப்பட இருக்கின்றது.
  • தேசிய பேரிடர் பதிலெதிர்ப்பு நிதியில் (National Disaster Response Fund - NDRF) இருந்து 6 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்திற்கு 7214.03 கோடிகள் அளவிற்கு கூடுதல் மத்திய அரசு நிதியை அளித்திடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
    • உதவியளிக்கப்படும் மாநிலங்கள் இமாச்சலப்பிரதேசம், (வெள்ளம் மற்றும் நிலச்சரிவு) ஆந்திரப் பிரதேசம் (வறட்சி), குஜராத் (வறட்சி), கர்நாடகா (வறட்சி), மகாராஷ்டிரா (வறட்சி) மற்றும் ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி (சூறாவளி).
  • பிரதமர் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று குஜராத்தின் நவசாரி மாவட்டத்தில் உள்ள தண்டியில் தேசிய உப்புச் சத்தியாக்கிரக நினைவிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
    • மேலும் அவர் அந்த நினைவிட வளாகத்தில், 1930 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியுடன் நடந்த 80 சத்தியாகிரகிகளின் சிலைகளை காந்தி சிலையோடு சேர்த்துத் திறந்து வைத்தார்.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பாரத் பார்வ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் முடிவிற்கு வந்தது.
    • இந்நிகழ்ச்சி தேசபக்த உணர்வை ஏற்படுத்தவும் நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மையை மேம்படுத்திடவும் எண்ணுகின்றது.
  • அமெரிக்காவின் நியூயாக்கில் சமீபத்தில் முடிவுற்ற மிகப்பெரிய பயணக் கண்காட்சியான நியூயார்க் டைம்ஸ் பயணக் கண்காட்சி 2019ல் சிறந்த கண்காட்சிக்காக இந்தியா சிறப்பு விருதினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்