TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 6 , 2019 1991 days 542 0
  • தமிழ்நாடு அரசு பிப்ரவரி 4 முதல் 10ம் தேதி வரை 30வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது.
    • இந்த வருடத்திற்கான (2019) கருத்துரு “சாலைப் பாதுகாப்பு - உயிர்ப் பாதுகாப்பு“ என்பதாகும்.
  • பிப்ரவரி 20 முதல் 24 வரை பெங்களூருவில் உள்ள எலஹாங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியாவின் 12வது பதிப்பான ஏரோ இந்தியா 2019 நடத்தப்பட இருக்கின்றது.
    • சர்வதேச விமானப் போக்குவரத்து துறையில் வியாபார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இது ஒரு முக்கியமான நடைமுறையை ஏற்படுத்த எண்ணுகின்றது.
  • மாநில கூட்டுறவுச் சங்கமான ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பாலை கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் தமிழ்நாடு பால்வளத் துறை அறிமுகம் செய்திருக்கின்றது. முன்னதாக இது சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • கொச்சி மாநகர காவல்துறையானது கொச்சியில் ரௌடிக் கும்பல், தீய சமூக சக்திகள் மற்றும் போதை மருந்துகள் கும்பல் ஆகியோரின் நடவடிக்கைகளை ஒழிக்க ‘உடைந்த சாளர நடவடிக்கை‘ என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.
  • பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிப்பதில் இந்தியாவின் ஏழாவது மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்து இருக்கின்றது.
    • இந்த இட ஒதுக்கீட்டை குஜராத் முதலில் அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பீகார், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தியிருக்கின்றன.
  • பிப்ரவரி 1 முதல் 3 வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 2வது ஜார்க்கண்ட் சர்வதேச திரைப்பட திருவிழாவானது ஒரு அரசு சாரா அமைப்பான நவபாரத் நிர்மாண் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • இதற்கு 5 லட்ச ரூபாய் தொகையுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டது.
  • ஐக்கிய அரசு அமீரகத்தின் “சகிப்புத் தன்மைக்கான வருடத்தின்“ துவக்க விழாவைத் துவக்கி வைப்பதற்காக போப் பிரான்சிஸ் அரேபிய தீபகற்பத்திற்கு கத்தோலிக்க தேவாலய தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
  • நூறு T20 போட்டிகளில் விளையாடிய முதல் ஆசியப் பெண்மணியாக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரான சனா மீர் உருவெடுத்து இருக்கின்றார்.
    • உலகில் இப்பெருமையை அடையும் 6வது பெண்மணி இவராவார். மேலும் இப்பட்டியலில் 110 டி20 போட்டிகளில் விளையாடிய வகையில் மேற்கு இந்தியத் தீவுகளின் தியேந்திர டோட்டின் முன்னணியில் இருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்