TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 7 , 2019 1990 days 565 0
  • இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து அமராவதியில் நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்தனர்.
  • இந்த நீதிமன்ற வளாகம் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கான இடைக்கால உயர்நீதிமன்றத்தைக் கொண்டிருக்கும்.
  • சிறைச்சாலை வடிவமைப்பிற்கான முதலாவது தேசிய மாநாடு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது.
  • பாரம்பரியக் கலைகளை இளைய கலைஞர்கள் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் புதுடெல்லியில் “2019 சோபன்” என்ற 6 நாட்கள் நடைபெறும் இசை மற்றும் நடனத் திருவிழா நடத்தப்பட்டது.
  • இது புதுதில்லி மாநகராட்சி மன்றத்துடன் (New Delhi Municipal Council - NDMC) இணைந்து புதுதில்லி அரசாலும் சாகித்ய கலா பரிசத்தாலும் நடத்தப்பட்டது.
  • விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி “எர்னஸ்ட் அண்ட் யங் வாழ்நாள் சாதனை விருதுக்குப்” பெயரிடப்பட்டுள்ளார்.
  • மிகப்பிரபலமாக EY என அறியப்படும் எர்னஸ்ட் அண்ட் யங் நிபுணத்துவ சேவைகளை அளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். மேலும் இது நான்கு மிகப்பெரிய கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்