TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 16 , 2019 1981 days 546 0
  • மத்திய அமைச்சரவையானது சமீபத்தில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கிளை அமர்வை ஜல்பைகுறியில் அமைத்திட ஒப்புதலளித்திருக்கின்றது.
    • முன்மொழியப்பட்டுள்ள இந்த கிளை அமர்வு டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுறி மற்றும் கூச் பிகார் ஆகிய நான்கு மாவட்டங்கள் மீது தனது அதிகார வரம்பெல்லையைக் கொண்டிருக்கும்.
  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes) தலைவரான சுசில் சந்திரா புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
    • இந்த நியமனம் இவ்வருடம் வரவிருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பிப்ரவரி 14-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்தியா பாகிஸ்தானிற்கு அளித்திருந்த “மிகவும் வேண்டப்பட்ட நாடு” என்ற தகுதியை ரத்து செய்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்