TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 15 , 2019 1955 days 588 0
  • மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான டி.கே பட்டமாளின் 100-வது நினைவு தினம் 2019 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று அனுசரிக்கப்படவிருக்கிறது.
    • இசைக் கச்சேரிகளில் ராகம், தாளம் மற்றும் பல்லவி ஆகிய மூன்றையும் நிகழ்த்திய முதலாவது பெண்மணி இவராவார்.
  • உதய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் நடத்தப்பட்ட வஸ்த்ரதான் பிரச்சாரம் என்ற இலவச ஆடைகள் நன்கொடைப் பிரச்சாரமானது 3 இலட்சம் ஆடைகளைப் பெற்றுள்ளது. நன்கொடை வழங்குவதற்காக மிக அதிக அளவிலான ஆடைகளைத் திரட்டியதற்காக இது கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
  • திபெத் பகுதியைச் சார்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் தங்களது 60வது தேசிய எழுச்சி தினத்தைக் கொண்டாடினர்.
    • இந்த நாளில் தங்களது தாய்நாட்டின் மீது கம்யூனிச நாடான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசாவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் திரண்டனர்.
  • இந்தியக் காவல்துறைப் பணியாளர்களின் பதவிக் காலம் நிறைவடைய குறைந்த பட்சம் 6 மாதங்கள் இருந்தாலும் அவர்கள் காவல்துறை பொது இயக்குநர் (DGP - Director General of Poilce) பதவிக்கு தகுதியுடையவர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு முன்பு இப்பதவிக்கு வருபவர்களின் பதவிக் காலம் நிறைவடைய கட்டாயம் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது.
  • சென்னையின் கிண்டி தேசியப் பூங்கா மற்றும் ராஜ் பவன் பாதுக்கப்பட்ட காடுகளில் வருடாந்திர வனவிலங்கு கணக்கெடுப்பின் போது 31 புல்வாய் இன மான்கள் மற்றும் 87 புள்ளி மான்கள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியானது பிரிட்டிஷ் இந்தியாவில் மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை வழியிலான உப்பு சத்தியாக்கிரகத்தின் 89-வது நினைவு தினத்தைக் குறிக்கிறது.
  • கார்ப்பரேஷன் வங்கியானது மார்ச் 12 ஆம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள தனது வங்கியின் பல்வேறு மையங்களில் தனது 114-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இத்தினத்தில் தான் 1906 ஆம் ஆண்டு முதல் கான் பகதூர் ஹஜ்ஜி அப்துல்லாஹ் ஹஜ்ஜி காசிம் சாஹிப் பகதூர் என்பவரின் தலைமையில் கர்நாடகாவின் உடுப்பியில் இது செயல்படத் துவங்கியது.
  • புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனரான வேத் ராஹி என்பவருக்கு புகழ்பெற்ற குசுமக்ராஜ் ராஷ்டிரிய சாஹித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட விருக்கிறது.
    • குசுமக்ராஜ் என்று அழைக்கப்படும் மராத்தியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியரான மறைந்த விவி சிர்வாத்கர் என்பவரின் நினைவாக குசுமக்ராஜ் விருது ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்