TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 25 , 2019 1945 days 556 0
  • இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான நவீன் சாவ்லா எழுதிய “Every Vote Counts” எனும் புத்தகமானது முன்னாள் குடியரசு துணைத் தலைவரான ஹமீத் அன்சாரியால் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது.
  • சென்னையில் நடந்த போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மட்டையாளரான சுரேஷ் ரெய்னா IPL போட்டிகளில் 5000 ஓட்டங்களைக் கடந்த முதல் மட்டையாளராக ஆகியுள்ளார்.
  • மகாராஷ்டிராவின் மும்பையில் ஹம்சஃபார் அறக்கட்டளை மூலமாக இந்தியாவின் முதல் HIV சிகிச்சை மையம் மற்றும் LGBTQ சமுதாயத்தினருக்கான முழுமையான மருத்துவ நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • பரோடா வங்கியானது அதன் ஊழியர்களின் குழந்தைகளுக்கான மழலையர் காப்பகம்/குழந்தைகள் பராமரிப்பு வசதியைத் தொடங்கிய முதல் இந்திய பொதுத் துறை வங்கியாக மாறியுள்ளது.
  • மத்திய அரசானது 2018-19 நிதியாண்டிற்கான முதலீடுகளை 85,000 கோடி ரூபாய் அளவில் திரும்பப் பெற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டி உள்ளது.
    • 2017 – 18 ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி அளவில் திரும்பப் பெற்ற பிறகு இரண்டாவது முறையாக ஒரே நிதியாண்டில் அதிக முதலீடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
  • துபாய் கலை விழாவின் 13-வது பதிப்பானது 42 நாடுகளிலிருந்து பங்கு பெற்ற 92 சமகால மற்றும் நவீன காட்சியகங்களுடன் நடத்தப்பட்டது.
    • இதன் சிறப்பு கவன மையம் தெற்காசியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்