TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 29 , 2019 1941 days 584 0
  • மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற நிதி வைப்புத் திட்டத்தினை தடைசெய்யும் அவசரச் சட்டமானது தற்போதுள்ள ஆபரணக் கடைகளால் நடத்தப்படும் மாதாந்திர திட்டங்களையும் சீட்டு நிதி நிறுவனங்களையும் பாதிக்காது.
  • தமிழகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஜஸ்வந் இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கு பாக்ஜலசந்தி வழியான 32 கிலோமீட்டர் தூரத்தை 10 மணிநேரம் 30 நிமிடத்தில் நீந்தி சாதனைப் படைத்துள்ளார்.
  • முதன்முறையாக இந்திய இராணுவமானது மஹாலங்கூர் இமாலயப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான சிகரங்களில் ஒன்றானதும் உலகின் ஐந்தாவது மிக உயர்ந்த மலையுமான மகலுவில் (8485 மீட்டர்) மலையேற்றத்தைத் தொடங்கவுள்ளது.
  • அமெரிக்காவானது மெக்ஸிகோவுடனான அதன் எல்லைப்பகுதியில் சுவரினை எழுப்ப 1 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்து அதன் ஒரு பகுதியின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்