TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 26 , 2019 1913 days 557 0
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சனைக்குரிய பகுதியான கோலன் குன்றுகளை இஸ்ரேலின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, அங்கு உள்ள யூதக் குடியிருப்பிற்குப் பெயரிடப்போவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
    • இஸ்ரேல் நாடானது அமெரிக்க அதிபரை கௌரவிக்கும் விதமாக, ஜெருசலமின் மேற்குச் சுவர் அருகே திட்டமிடப்பட்டுள்ள இரயில் நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் (Securities and Exchange Board of India) அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு கட்டமைப்பைப் போன்று மும்பை பங்குச் சந்தையும் (Bombay Stock Exchange - BSE) தனது உறுப்பினர்களுக்கு இணையப் பாதுகாப்புச் சேவைகளை அளிப்பதற்காக வலையமைப்பு நுண்ணறிவு என்ற ஒரு தனியார் நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளது.
    • வலையமைப்பு நுண்ணறிவு நிறுவனமானது உறுப்பினர்களுக்கு அனைத்து நாட்களிலும் (24x7) இணையப் பாதுகாப்பு சேவைகளை அளிப்பதற்காக தனது சொந்த தளமான “ப்ளுஸ்கோப்” என்ற தளத்தைப் பயன்படுத்த விருக்கின்றது.
  • பாரத ஸ்டேட் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனமானது இணையத் தாக்குதல்கள் காரணமாக நிதியியல் மற்றும் தொடர் இழப்புகளிலிருந்து வணிகங்களைப் பாதுகாப்பதற்காக “இணையப் பாதுகாப்புக் காப்பீடு” என்ற ஒரு சேவையைத் தொடங்கியுள்ளது.
  • ரோலக்ஸ்-மாண்டீ-கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் ATP மாஸ்டர்ஸ் 1000 என்ற பட்டத்தை வென்ற முதலாவது இத்தாலியராக பேபியோ பாக்னினி உருவெடுத்துள்ளார். இவர் செர்பீயாவைச் சேர்ந்த தூசன் லஜோவிக் என்பவரைத் தோற்கடித்தார்.
  • ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனமானது வருடாந்திர வருவாயில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டிய முதலாவது இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
    • 2018–2019 ஆம் நிதியாண்டிற்கான இதன் வருவாயின் மதிப்பு ரூ. 1,30,556 கோடியாகும். இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு மதிப்பான ரூ. 69,198 கோடியை விட இது 89 சதவிகிதம் அதிகமாகும்.
  • வட கொரிய அதிபரான கிம் ஜாங்-உன் மற்றும் இரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் ஆகியோர் பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோஸ்தாக்கில் நடைபெற்ற மாநாட்டில் முதன்முறையாக சந்தித்துப் பேசினர்.
  • சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது தேசிய வீட்டுவசதி வங்கி (National Housing Bank - NHB), தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture & Rural Development - Nabard) ஆகியவற்றில் உள்ள தனது மொத்தப் பங்குகளையும் மத்திய அரசிற்கு விற்பனை செய்துள்ளது. ரிசர்வ் வங்கியானது இந்த இரண்டு நிறுவனங்களிடமும் வைத்துள்ள பங்குகள் முறையே ரூ. 1,450 கோடி மற்றும் ரூ. 20 கோடிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்