TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 1 , 2019 1908 days 628 0
  • லெபனானின் தலைநகரான பெய்ரூட் நகரமானது 24 மணி நேரத்தில் நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான தேசியக் கொடிகளை உயர்த்தியதற்காக புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இங்கு 26,852 தேசியக் கொடிகள் உயர்த்தப்பட்டன.
  • இஸ்ரேலில் உள்ள அம்முனிசன் குன்றில் இந்தியாவின் முன்னாள் படைத் தளபதியான JFR ஜேக்கப் என்பவரின் பெயரை பெயர்ப் பலகையில் பொறித்து அந்நாடு கவுரவப்படுத்தியுள்ளது.
    • 1971 ஆம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போருக்குப் பின்னர் டாக்காவில் பாகிஸ்தான் படைகள் சரணடைய இவர் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டார்.
  • கிர்கிஸ்தான் நாட்டின் பிஸ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organisation) பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
  • இச்சந்திப்பின் ஒரு பகுதியாக இவர் சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான வெய் பென்ஜி என்பவரை சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்