TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 17 , 2019 1892 days 623 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தின் 1267 தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்ட அல் கொய்தா தடைவிதிப்புக் குழுவானது ஐஎஸ்ஐஎஸ் கோராசன் மீது தடைகளை விதித்துள்ளது.
    • ஐஎஸ்ஐஎஸ் - கே என்பது பாகிஸ்தானைச் சேர்ந்தவரால் 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். இது ஐஎஸ்ஐஸ் அமைப்பின் தெற்கு ஆசியக் கிளை என்றும் அழைக்கப்படுகின்றது.
  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒருங்கிணைந்த பகுதியான கேரளாவில் உள்ள வயநாடு வனவிலங்கு சரணாலயமானது (Wayanad Wildlife Sanctuary - WWS) அதிகமான புலிகளைக் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 176 புலிகளில், 75 புலிகள் WWS-ல் கண்டறியப்பட்டுள்ளன.
    • இந்த உயிர்க்கோள முக்கியப் பகுதியானது கர்நாடகாவில் உள்ள நாகர்கோல், வடகிழக்கில் பந்திப்பூர் மற்றும் தென்கிழக்கில் முதுமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் வலைப் பின்னலினால் சூழப்பட்டுள்ளது.
  • இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கியானது (Small Industries Development Bank of India - SIDBI) சிறு தொழில்களுக்கு நிதியளிக்கின்ற மற்றும் வருமானத்தைத் தருகின்ற இதர நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புதுமைக் கால நிதியியல் தொழில்நுட்ப நிறுவனங்களான வங்கிப் பணி அல்லாத நிதியியல் நிறுவனங்களுக்கு (NBFC - non-banking finance companies) ரூ.10 கோடி வரை நிதியுதவித் தொகையை நீட்டிப்பதற்காக சோதனைத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
    • நிதியியல் தொழில்நுட்பம்சார் NBFC-களானது டிஜிட்டல் முறையில் கடனளிக்கும் நிறுவனங்களாகும். இவை நிதித் தொகையினை எளிதான முறையிலும் விரைவாகவும் அணுகுவதற்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
  • இந்தியத் தலைமைக் கடற்படைத் தளபதியான சுனில் லம்பா இந்தியக் கடற்படையின் முதலாவது முழுமையான தேர்வு வாரியத்தினை (SSB - Service Selection Board) கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள டைமண்ட் ஹார்பரில் தொடங்கி வைத்தார்.
    • இதன் தொடக்க விழாவில் இந்தியத் துணைக் கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், தலைமைக் கொடி அதிகாரி, கிழக்கு மண்டலத் தலைமைத் தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழியில் வாழும் கடல்சார் உயிரினங்களில் கதிரியக்கக் கார்பன் இருப்பதற்கான தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • இந்தக் கதிரியக்கக் கார்பன் 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட அணு ஆயுதச் சோதனையின் போது வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டதாகும்.
  • தேசியத் தூய்மை கங்கைத் திட்டம், எச்சிஎல் நிறுவனம் (HCL) மற்றும் இந்தியாவில் தேசியக் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய அறக்கட்டளை (Indian National Trust for Art and Culture Heritage - INTACH) ஆகியவை “நமாமி கங்கை” திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் ருத்ராக்ச மரங்களை நடுவதற்காக முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்