இந்தியாவின் முதலாவது பெண் காவல்துறைப் பொது இயக்குநரான (Director General of Police - DGP) 1973 ஆம் ஆண்டு பணிப் பிரிவைச் சேர்ந்த இந்தியக் காவற் பணி அதிகாரி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா சமீபத்தில் காலமானார். இவர் 2004 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் DGPயாக நியமிக்கப்பட்ட போது வரலாறு படைத்தார்.
இந்தியாவின் இரண்டாவது பெண் இந்தியக் காவல் பணி அதிகாரியும் இவரேயாவார்.
மகாராஷ்டிர அரசாங்கம் தனது புதிய தொழிற்துறைக் கொள்கையில், உள்ளூர் மக்களுக்கு மொத்தப் பணிகளில் 80 சதவிகிதப் பணிகளை அளிக்க வழி வகுக்கும் ஒரு புதிய “மண்ணின் மைந்தர்கள்” என்ற ஒரு பிரிவை வகுத்துள்ளது.
இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிக்கிடையே 10வது பேருந்துச்சேவை அறிவிக்கப் பட்டுள்ளது. இது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியை காத்மாண்டுடன் இணைக்கின்றது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவானது விண்வெளியில் நிகழ்த்தப்பட்ட முதலாவது குற்றம் என்று கருதப்படும் குற்றம் ஒன்றை விசாரித்துக் கொண்டிருக்கின்றது.
விண்வெளி வீரர் அன்னே மெக்லைன் என்பவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது அடையாளத் திருட்டு மற்றும் தனது பிரிந்த மனைவியின் தனிப்பட்ட நிதிப் பதிவுகளைத் தவறாக அணுகியது ஆகியவற்றிற்காகக் குற்றம் சாட்டப் பட்டார்.