தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்திற்கு (National Aeronautics and Space Administration - NASA) கல்வி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள விண்வெளி வீரர்களுடன் உரையாட இருக்கும் மூன்று மாணவர்களில் ஒருவராக மதுரையைச் சேர்ந்த ஜே தன்யா தஸ்னெம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
10 ஆம் வகுப்பு பயிலும் இந்த மாணவி 2019 ஆம் ஆண்டின் தேசிய விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற பின்பு இந்த வாய்ப்பைப் பெற்றார்.
ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது சட்டப் பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிரான “சட்ட சவாலை” ஆராய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்விற்கு மாற்றப் பட்டுள்ளது.
மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி. வி. சதானந்த கவுடா “ஜன் அவுசாதி சுகம்” என்ற ஒரு கைபேசி செயலியை அறிமுகப் படுத்தியுள்ளார். மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஜன் அவுசாதி என்ற பொது மருந்துக் கடைகளைத் தேட இது உதவும்.
ஒரு நல்ல ரட்சகரை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவும் நபர்களுக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்கு மேம்படுத்தப்பட்ட அபராதங்களைக் கையாள்வது உட்பட, மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2019இன் 63 விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய உட்பிரிவுகள் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லேஹ் நகரில் உள்ள அதி உயர ஆராய்ச்சிக்கான பாதுகாப்பு நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட ‘26வது லடாக்கி கிசான் ஜவான் விக்ஞ்யான் மேளாவைத்’ தொடங்கி வைத்தார்.
பிரபல பொருளாதார நிபுணர் அப்தல்லா ஹம்தோக் சூடானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
சமீபத்தில் சீனாவின் செங்டூவில் நடைபெற்ற உலக காவல் துறை மற்றும் தீ சார்ந்த விளையாட்டுகளின் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த காவலர் மோனாலி ஜாதவ் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.