2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் ராஷ்டிரிய போஷன் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டின் கருத்துரு “நிறைவை உண்டாக்குமாறு உணவளித்தல்” என்பதாகும்.
சீன நகரமான ஹோல்டனில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையே ஷாஹீன் VIII என்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் 8 வது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது.ஹோல்டன் ஆனது இந்திய எல்லையான லடாக்கிற்கு அருகே உள்ளது.
விங் கமாண்டர் ஷாலிஜா தாமி ஒரு பறக்கும் பிரிவின் விமானத் தளபதியாக ஆன இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரியாக உருவெடுத்து வரலாறு படைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் ஒரு சேடக் வானூர்திப் பிரிவின் விமானத் தளபதியாக அவர் பொறுப்பேற்றார்.