ஆசியாவின் முதலாவது ஐந்தாம் தலைமுறையிலான மாயத் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மேம்பட்ட ஓட்டுனர் பயிற்சி உருவக மையமானது சென்னையில் உள்ள தென்னிந்திய மையத்தின் தானியங்கி கூட்டமைப்பில் (Automobile Association of Southern India Centre - AASI) தொடங்கப்பட்டது.
முதல் 6 மாதங்களில், AASI ஆனது 200 அவசர ஊர்தி ஓட்டுநர்களுக்கு ‘பாதுகாப்பான ஓட்டுநர் பிரச்சாரத்தின்’ கீழ் இலவசமாகப் பயிற்சி அளிக்கும்.
நாட்டின் முதன்மைச் செய்தி நிறுவனமான இந்தியப் பத்திரிக்கை அமைப்பின் தலைவராக பஞ்சாப் கேசரி குழுமத்தின் தலைமை ஆசிரியர் விஜய் குமார் சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தி இந்து பத்திரிக்கையின் வெளியீட்டாளரும் அதன் முன்னாள் தலைமை ஆசிரியருமான என். ரவி என்பவர் இப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளரும் பென்னட், கோல்மன் & நிறுவன லிமிடெட் என்பதின் நிர்வாக இயக்குனருமான வினீத் ஜெயின் இதன் துணைத் தலைவராக உள்ளார்.
நாடு முழுவதும் உள்ள புலனாய்வாளர்களுடன் நிகழ்நேரத்தில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ரூபாய் 99 கோடி செலவில் ஒரு மையப்படுத்தப்பட்ட மேலிருந்து கீழான தொழில்நுட்பப் பிரிவை (Centralised Technology Vertical - CTV) அமைக்க மத்தியப் புலனாய்வு அமைப்பு (Central Bureau of Investigation - CBI) திட்டமிட்டுள்ளது.
கனடாவுக்கான இந்திய உயர் ஆணையரான விகாஸ் ஸ்வரூப் என்பவர் இந்தியக் கலைக் கூடத்தை 44வது டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழா - 2019இல் (Toronto International Film Festival - TIFF) திறந்து வைத்தார்.
இந்திய சினிமாவின் உலகளாவிய வளர்ச்சிக்கும் இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழா 2019க்கும் ஒரு சிறந்த தளத்தை TIFF வழங்குகின்றது.
ஜிம்பாபேவின் நிறுவனத் தந்தையும் முன்னாள் அதிபருமான ராபர்ட் கேப்ரியல் முகாபே சமீபத்தில் காலமானார்.
வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களின் கூட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைக்கான முழு அணுகலுடன் கூடிய இந்திய கடற்படைத் தேவைகளுக்கு ஏற்ப காற்று இல்லாத நிலையில் உட்செலுத்து அமைப்புடன் (Air Independent Propulsion - AIP) ஒரு வழக்கமான நீர்மூழ்கிக் கப்பலின் கூட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.