TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 10 , 2019 1777 days 602 0
  • ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மால்கான்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய பழங்குடிப் பெண்ணான அனுப்பிரியா லக்ரா என்பவர் வணிக விமானத்தை ஓட்டிய இப்பகுதியைச் சேர்ந்த முதலாவது பெண் விமானியாக உருவெடுத்துள்ளார்.
    • அவர் சந்தால் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளின் படி, குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி விக்ரம்நாத் நியமிக்கப் பட்டுள்ளார். தற்போது அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருகின்றார்.
  • பிரபல ஒடியா மொழி எழுத்தாளரான பிரதீப் தாஷ் தனது கவிதைப் படைப்பான “சாரு சிபார் ஓ சார்ஜியாவுக்காக” மதிப்பு மிக்க சரலா புரஸ்கரின் 40வது பதிப்பு விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • 1979 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சரலா புரஸ்கர் விருதானது ஒடிசாவின் முன்னணி இலக்கிய விருதுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்