தேஜாஸ் (கடற்படை விமானம்) என்ற இலகு ரகப் போர் விமானத்தின் முதலாவது “கட்டாயத் தரையிறக்கமானது" கோவாவில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா என்ற கடற்படைத் தளத்தில் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்தச் சோதனையானது இந்த விமானத்தை இந்திய கடற்படை விமானம் தாங்கிக் கப்பலான விக்ரமாதித்யாவில் தரையிறக்கம் செய்ய வழி வகுக்கும்.
புகழ்பெற்ற இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாகக் கொண்டாடும் விதமாக 1953 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதியன்று இந்தி திவாஸ் (அல்லது இந்தி நாள்) அனுசரிக்கப்படுகின்றது.
1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று இந்திய அரசியலமைப்புச் சபையானது தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப்பட்ட இந்தி மொழியை இந்தியக் குடியரசின் அலுவல்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.
பெப்சிகோ இந்தியா நிறுவனம் தனது விளையாட்டின் போது அருந்தப்படும் குளிர்பானத்தின் பிரிவான கேடோரேட்டின் விளம்பரத் தூதராக இந்தியாவின் நட்சத்திர தடகள வீரரான ஹிமா தாஸை இணைத்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் விளம்பரத் தூதர்களாக இருக்கும் இறகுப்பந்தாட்டவீரரான பி.வி.சிந்து மற்றும் ஈட்டி எறியும் வீரரான நீரஜ் சோப்ரா ஆகியோருடன் 19 வயதான ஹிமா தாசும் இணைந்துள்ளார்.