முன்னாள் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான பி.லட்சுமண ரெட்டி என்பவர் அம்மாநிலத்தின் முதலாவது லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.
விஜயவாடாவில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆந்திரப் பிரதேச ஆளுநரான பிஸ்வபூசன் ஹரிசந்தன் என்பவரால் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
ஒடிசா கடற்கரையில் இருந்து "அஸ்திரா" என்ற ஏவுகணையை இந்திய விமானப் படை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையானது சுகோய் சு - 30 எம்.கே.ஐ என்ற போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டது.
மார்பகப் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த சாரா தாமஸ் என்பவர் ஆங்கிலக் கால்வாயை நான்கு முறை 54 மணிநேரங்கள் இடைவிடாமல் நீந்திய முதலாவது நபராக உருவெடுத்துள்ளார்.