வேலூர் மாவட்டத்தின் ஜோலர்பேட்டையிலிருந்து 437.25 மில்லியன் லிட்டர் தண்ணீரானது சென்னைக்குக் கடந்த மூன்று மாதங்களில் கொண்டு சென்ற பிறகு, இந்தச் சேவை தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரைப் பெறும் வேலூர் ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் இந்த நீர் எடுக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மற்றும் அதிவேகமாக & கவனக் குறைவாக வாகனம் ஓட்டுவதன் மூலம் விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரை மோட்டார் வாகனச் சட்டத்தைத் தவிர இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் தனித் தனியாக தண்டிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் குற்றங்களைத் தனித்தனியாகக் கையாளுவதற்கு என்று மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் "எந்தவொரு விதிமுறைகளும் இல்லை" என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
முதன்முறையாக, யமுனை ஆற்றில் துர்க்கை சிலைகளை கரைப்பதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக அந்தச் சிலைகளைக் கரைப்பதற்கு அதற்கென்றுத் தனியாக குழிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
கேரளாவில் நடைபெறும் ஆற்றுப் படகுப் போட்டியின் உணர்ச்சி, இயற்கையோடு இணைந்த ஒலி, கலாச்சாரம் மற்றும் கொண்டாட்டம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்ற “கேரளாவின் உயிர்” என்ற குறும்படமானது 2019 ஆம் ஆண்டின் “மை ரோட் ரீல்” என்ற போட்டியில் “மக்களின் விருப்பம்” என்ற விருதை வென்றுள்ளது.
இந்தப் போட்டியானது உலகின் மிகப்பெரிய குறும்படப் போட்டி என அழைக்கப் படுகின்றது.