உகாண்டாவில் நடத்தப்பட்ட 64வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகரான பி தனபால் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 6வது பதிப்பானது திருவண்ணாமலையில் நடைபெற இருக்கின்றது.
தேசிய அஞ்சல் வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2019 ஆம் ஆண்டின் தக் சேவா விருதுகளை தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு வழங்கினார்.
மேலும் உலக அஞ்சல் தினத்தின் 50வது ஆண்டைக் குறிக்கும் வகையில் விருதுகள் குறித்த சிறு புத்தகம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் சுதா சேஷயன் என்பவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களால் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள மருத்துவ ஆலோசனைக் குழுவின் (Medical Advisory Council - MAC) உறுப்பினராகப் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
MACயின் மூலம் மாநிலங்கள், மருத்துவக் கல்வி மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான தங்களது கவலைகளை ஆணையத்தின் முன் வைக்கும்.
தனது ஒரு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டபடி, திருநங்கைகளுக்கும் ராஜஸ்தான் மாநில அரசு வேலையின்மை படித் தொகையை நீட்டித்துள்ளது. இவர்கள் தற்பொழுது மாதத்திற்கு ரூ 3,500ஐப் பெற இருக்கின்றனர்.
பட்டம் பெற்ற திருநங்கைகள் இச்சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
முதல் முறையாக, கேரளாவில் உள்ள நிலத்தடி பாறை அமைப்புச் சூழலில் ஒரு புதிய விலாங்கு போன்ற அயிரை மீன் இனமானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு பாங்கியோ புஜியா என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.
விலாங்கு இனமானது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவையாகும்.
எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் மிகச்சிறிய உறுப்பினர் நாடுகளில் ஒன்றான ஈக்வடார் ஆனது நிதிப் பிரச்சினைகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 14 நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியமானது (International Monetary Fund - IMF) இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ‘உள்நாட்டுத் தேவையானது’ எதிர்பார்த்த கண்ணோட்டத்தை விட பலவீனமாக இருப்பதுவே இதற்கு காரணம் என்று அந்த அமைப்பு மேற்கோள் காட்டியது.