TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 18 , 2019 1739 days 686 0
  • சென்னையிலிருந்து ஒரு அலையன்ஸ் ஏர் நிறுவன விமானமானது இலங்கையில் உள்ள  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இலங்கையில் எல்டிடிஇ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து 40 வருட இடைவெளிக்குப் பின்னர் இந்த விமான நிலையத்தில் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதை இது குறித்தது.
    • இந்த விமான நிலையத்திற்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது.
  • நாட்டில் உள்ள அறை குளிரூட்டிகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றான ப்ளூ ஸ்டார் நிறுவனமானது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலியை தனது புதிய விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. இந்தப் புதிய விளம்பரப் பிரச்சாரத்தின் முழக்கம் ‘விராட்டிற்கு சொந்தமானது, விராட்டினால் நேசிக்கப்பட்டது’ என்பதாகும்.
  • இஷ்ரத் ரஷீத் என்பவர் காஷ்மீரின் முதலாவது பெண் சர்வதேச மாற்றுத் திறன் கொண்ட கூடைப் பந்தாட்ட வீரராக உருவெடுத்துள்ளார். அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச சக்கர நாற்காலி கூடைப் பந்துப் போட்டியில் இஷ்ரத் விளையாட உள்ளார்.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதியன்று உலக அதிர்ச்சி தினம் அனுசரிக்கப்படுகின்றது. உலகெங்கிலும் இறப்புகள் மற்றும் இயலாமையை ஏற்படுத்தும் அதிக அளவிலான விபத்துக்கள் & காயங்களின் விகிதம் மற்றும் அவற்றைத் தடுக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை இந்த நாள் எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்