பெரு நகரங்களைச் சுற்றியுள்ள சிறிய நகரங்களை இணைப்பதற்காக இந்திய ரயில்வேயானது ’09 சேவா' என்ற சேவை ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரயில் சேவையானது மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக & தொழில் துறை அமைச்சரான பியூஷ் கோயல் என்பவரால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் சவுதி அரேபியாவும் கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் சர்வதேச வர்த்தகத்திற்காகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் மற்ற இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளன.
இந்தியா சவூதி அரேபியாவுடனான தனது முதலாவது கூட்டு கடற்படைப் பயிற்சியை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடத்த இருக்கின்றது.
இந்தியாவைச் சேர்ந்த முன்னணியில் உள்ள ஆண்கள் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் 2019 ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
இந்த ஜோடியானது உலக முதல் தர ஜோடியான மார்கஸ் பெர்னால்டி மற்றும் கெவின் சுகமுல்ஜோவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் ஆணையமானது சாகிப் அல் ஹாசன் மீது நீண்ட காலத் தடை விதித்ததை அடுத்து வங்க தேச கிரிக்கெட் வாரியமானது மஹமுதுல்லாவை மூத்தோர் தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அணித் தலைவராக நியமித்துள்ளது.
ஊழல் நடத்தை பற்றிய அணுகுமுறைகள் குறித்துப் புகாரளிக்கத் தவறியதால் சாகிப் கிரிக்கெட் விளையாட 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டும் 1 வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டும் உள்ளார்.