சர்வதேச ஆற்றல் நிறுவனத்தினால் (International Energy Agency - IEA) வெளியிடப்பட்டுள்ள “2019 ஆம் ஆண்டின் உலக ஆற்றல் கண்ணோட்டம்” என்ற அறிக்கையானது 2018 மற்றும் 2040 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் நிகர எண்ணெய் இறக்குமதி தேவைகள் இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
இந்த அறிக்கையின் “நிலையான வளர்ச்சி நிலையானது” (Sustainable Development Scenario - SDS) புவி வெப்பமயமாதலை 1.65 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பட்டியலிடுகின்றது.
இலங்கையின் அதிபரான கோத்தபய ராஜபக்சே முன்னாள் அதிபரான மஹிந்தா ராஜபக்சேவை அந்நாட்டின் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்கள் வரை இலங்கையின் பிரதமராக அவர் பதவி வகிப்பார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த போதிலும் தனது கட்சியின் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாசாவின் தோல்வியைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவிற்குப் பதிலாக மஹிந்தா ராஜபக்சே பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கின்றார்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஐந்து பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்று, ரூ. 78,400 கோடி மதிப்பிலான நிதியைத் திரட்டுவதற்குத் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம், இந்திய சரக்குக் கொள்கலன் கழகம், டிஎச்டிசி இந்திய நிறுவனம் மற்றும் வடகிழக்கு மின்சார எரிசக்திக் கழகம் ஆகியவை ஆகும்.
நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தில்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமையின் தலைமையகத்தில் "QUAD" நாடுகளுக்கான (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) முதலாவது தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியை தேசியப் புலனாய்வு அமைப்பு நடத்துகின்றது.
“CT-TTX” (தீவிரவாத எதிர்ப்பு முன்னிலைப் பயிற்சி) என்பது பொது நலன்கள் குறித்த பிராந்திய & உலகளாவியப் பிரச்சினைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு & ஒத்துழைப்பு ஆகியவை குறித்து QUAD நாடுகளிடையே நடத்தப்படும் ஒரு முதலாவது பயிற்சியாகும்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய தீவிரவாதக் குறியீடானது 2018 ஆம் ஆண்டில் 163 நாடுகளுக்கான தீவிரவாதத்தின் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளது. உலகிலேயே மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பாக தாலிபான்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
7,000க்கும் அதிகமான இறப்புகளுடன் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளன.
1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது நவம்பர் 21 ஆம் தேதியை உலக தொலைக்காட்சித் தினமாக அறிவித்தது. 1996 ஆம் ஆண்டில் இத்தினத்தில் முதலாவது உலகத் தொலைக்காட்சி மன்றம் நடத்தப்பட்டதை இத்தினம் நினைவு கூறுகின்றது.
வளமான கடல்சார்ந்த சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்காகவும்உலகில் உள்ள மீன் வளத்தின் நிலையான பங்கினை உறுதி செய்வதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதியன்று உலக மீன்வள தினம் கொண்டாடப் படுகின்றது.