கல்வி நிபுணர், ஆசிரியர் மற்றும் கேரளப் பல்கலைக் கழகத்தின் பதிப்பகத் துறையின் தலைவரான எம்.எம். குழிவேலி என்பவரை கௌரவிப்பதற்காக அவரது உருவம் பொறித்த ஒரு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
இவர் “விஜ்னனம்” என்ற முதலாவது கலைக் களஞ்சியத்தை மலையாளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் குழந்தைகளின் இலக்கியத்திற்காக சிறப்பாகப் பங்காற்றியுள்ளார்.
இந்தியக் கடற்படைக்கும் ஜப்பானியக் கடல்சார் தற்காப்புப் படைக்கும் இடையே வெடி பொருள்களை செயலிழக்கச் செய்தல் மற்றும் சுரங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்த ஒரு முதலாவது இருதரப்புப் பயிற்சியானது கொச்சியில் நடத்தப் பட்டது.
வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சரான ஜிதேந்திர சிங் என்பவர் 4 நாட்கள் நடைபெறும் ‘வடகிழக்கு இலக்கு’ என்ற ஒரு நிகழ்ச்சியை உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் தொடங்கி வைத்தார்.
இந்தத் திருவிழாவானது வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் கைவினைப் பொருள்களின் வேலைப்பாடு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.
ரூபாயின் சர்வதேச மயமாக்கலை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு சிறப்பு வம்சாவளி ரூபாய் கணக்குகளைத் (special non-resident rupee - SNRR) தொடங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. இந்த கணக்குகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக பணம் அனுப்ப இந்த வங்கி அனுமதி வழங்கியுள்ளது.