ஜாகுவார் (சிறுத்தைப் புலிகள்) எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இரண்டாவது சர்வதேச ஜாகுவார் தினம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஐ.நா மேம்பாட்டுத் திட்டம், உலக வனவிலங்கு நிதியம், வன விலங்குப் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசாங்கங்கள் ஒருங்கிணைக்கின்றன.
ஐரோப்பிய மன்றத்தின் தலைவராக இருந்த டொனால்ட் டஸ் என்பவரை அடுத்து பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி சார்லஸ் மைக்கேல் என்பவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜீன் கிளாட் ஜங்கர் என்பவரை அடுத்து உர்சுலா வான் டெர் லேயன் என்பவர் அதன் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.