முதலீடு, இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பெறாத இந்தியர்களின் நலன் ஆகியவற்றிற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்காக 'வெளிநாட்டு ஒத்துழைப்புத் துறை' என்ற ஒரு புதிய துறையை உருவாக்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி புரோ லீக்கின் போது இந்தியாவின் உள்நாட்டில் நடக்கும் போட்டிகளை புவனேஸ்வரில் நடத்தப் போவதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (International Hockey Federation - FIH) அறிவித்துள்ளது. இந்தியாவில் ஹாக்கி மையமாக புவனேஸ்வர் உருவெடுத்துள்ளது.
மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனமானது தனது “K - 12 கல்வி மாற்றக் கட்டமைப்பை” அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊழலை எதிர்த்து செயல்பட ஆந்திர மாநில அரசு அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் இரவு நேரங்களில் (மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை) வேலை செய்ய கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக பொது விநியோகம் தொடர்பான புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவல்துறை இயக்குனரான பிரதீப் வி. பிலிப் என்பவர் “ஸ்கோச் ஆர்டர் ஆஃப் மெரிட்” என்ற தகுதியைப் பெற உள்ளார். 1993 ஆம் ஆண்டு “சமூகக் காவல் துறை – காவல் துறை நண்பர்கள்” மற்றும் “ஸ்மார்ட் போலிஸிங் - உங்கள் குற்றவாளியை அறிந்து கொள்ளுங்கள்” என்ற பிரிவுகளின் கீழ் இவர் இந்த இரண்டுத் திட்டங்களை வழங்கினார்.
மொரீஷியஸ் நாட்டின் தற்போதைய பிரதமரான பிரவிந்த் ஜுக்னாத் மீண்டும் ஐந்தாண்டு காலத்திற்குப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
சுதர்சன் சக்ரா படைப்பிரிவு என்று அழைக்கப்படுகின்ற இந்திய இராணுவத்தின் பாதுகாப்புப் படைப் பிரிவானது அதன் வருடாந்திரப் பயிற்சியான சிந்து சுதர்சன்- VII என்ற பயிற்சியை ராஜஸ்தானின் உள்ள பார்மரில் நடத்தியது.
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதற்காக இந்தியாவில் உள்ள சுமார் 1,800 அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான வெளிநாட்டுப் பங்களிப்புகள் ஆனது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.