மகாராஷ்டிராவில் உள்ள மும்பை - நாக்பூர் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலைக்கு மறைந்த பால் தாக்கரேவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இந்த அதிவேக நெடுஞ்சாலையானது மும்பைக்கும் நாக்பூருக்கும் இடையில் அமைந்துள்ளது.
பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பதிலாக ஒருங்கிணைந்தப் பொருட்கள் மற்றும் சேவை வரி (Integrated Goods and Service Tax - IGST) தொடர்பான அமைச்சர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தத் தகவலை ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) ஆணையம் தெரிவித்துள்ளது.
டாக்டர் பத்மேஸ்வர் கோகோயிக்கு சியு-கா-பா விருது வழங்கப் பட்டுள்ளது.
தாவரவியல் மற்றும் அறிவியல் துறையில் அவர் ஆற்றிய முயற்சி மற்றும் பங்களிப்புகளுக்காக இந்த விருது அவருக்கு அளிக்கப் பட்டுள்ளது.