ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள லண்டனில் நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த டோனி - ஆன் சிங் என்பவர் 2019 ஆம் ஆண்டின் உலக அழகியாக (மிஸ் வேர்ல்ட்) முடி சூட்டப் பட்டார்.
இவர் 2018 ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டியின் வெற்றியாளரான மெக்ஸிகோவைச் சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோனிடமிருந்து தனக்கான உலக அழகி கிரீடத்தைப் பெற்றார்.
லாகூர் மற்றும் வாகா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையானது 22 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 2019 டிசம்பர் மாதத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்த ரயில் சேவையானது 1947 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. ஆனால் இந்தச் சேவையானது சில செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் நிறுத்தப் பட்டது.