கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ராமநாட்டுக்கராவைச் சேர்ந்த ஆதித்யா கே. என்பவர், அம்மாநிலத்தின் துணிச்சலுக்கான மிக உயர்ந்த கௌரவ விருதான“பாரத் விருதைப்” பெற்ற முதலாவது குழந்தையாக உருவெடுத்துள்ளார்.
எரியும் பேருந்தில் இருந்து 20 பேரை காப்பாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
வெங்கையா நாயுடு புது தில்லியில் ‘கொந்தளிப்பு மற்றும் வெற்றி: மோடியின் ஆண்டுகள்’ என்றப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தை ராகுல் அகர்வால் மற்றும் பாரதி எஸ் பிரதான் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce & Industry - FICCI) 92வது ஆண்டு மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது.
சிறை நிர்வாகத்தில் சீருடை அணிந்த பெண்கள் குறித்த இரண்டாவது தேசிய மாநாடானது மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள மத்தியக் காவல் துறைப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
முதல் தேசிய மாநாடானது புது தில்லியில் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்றது.