December 25 , 2019
1671 days
570
- ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டத்தில் ஒரு எஃகு ஆலையைத் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
- இந்த ஆலைக்குத் தேவையான இரும்புத் தாதுவை தேசியக் கனிம வள மேம்பாட்டுக் கழகமானது (National Mineral Development Corporation - NMDC) வழங்க உள்ளது.
- தோஹாவில் நடந்த 6வது கத்தார் சர்வதேசக் கோப்பை போட்டியில் இந்தியாவின் பளு தூக்கும் வீராங்கனையான சைகோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ‘ஒய்.எஸ்.ஆர் நேதன்னா நேஸ்தம்’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
- இத்திட்டத்தின் கீழ், ஆந்திர மாநில அரசானது மாநிலம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.24,000 நிதி உதவி வழங்கத் திட்டமிட்டுள்ளது.
Post Views:
570