ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சிக் குழு ஒன்று மாற்றியமைக்கப்பட்ட டிஎன்ஏவை சரிசெய்யும் ஒரு புரதத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட டிஎன்ஏவை சரிசெய்யும் விதமாக 'டிஎன்ஏ புரதங்கள்' எனப்படும் சிறப்பு வகைப் புரதங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஹரியானாவின் கர்னால் என்னுமிடத்தில் உள்ள புதிய அனாஜ் மண்டியில் “அடல் கிசான் மஜ்தூர் உணவகத்தினை” திறந்து வைத்துள்ளார்.
ரூ.10க்கு உணவைப் பெறும் வகையில் அமைந்த இந்த உணவகமானது விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிதும் பயனளிக்கின்றது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணுசக்தி நிலையங்கள் குறித்த ஒப்பந்தத்தினைப் பரிமாறிக் கொண்டன. இதன் மூலம் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களைத் தாக்கிக் கொள்வதை தடுக்க முடியும்.
இந்த நடைமுறையானது 29 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.