2020 ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உஜாலா மற்றும் எல்.இ.டி (ஒளி-உமிழ் இருமுனையம்) தெரு விளக்குகள் தேசிய திட்டம் ஆகியவை தங்களது ஐந்தாவது ஆண்டு நிறைவை அனுசரித்தன.
இந்தத் திட்டங்கள் எரிசக்தித் திறன் சேவைகள் (Energy Efficiency Services Limited - EESL) என்ற நிறுவனத்தினால் செயல்படுத்தப் படுகின்றன.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான லியோ கார்ட்டர் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த உலகின் ஏழாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்து, உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஒரு சிறிய நிதியியல் வங்கியாக மாற்றுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற நாட்டின் முதலாவது கூட்டுறவு வங்கியாக சிவாலிக் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி உருவெடுத்துள்ளது.
சிவாலிக் எம்சிபி வங்கியின் தலைமையகமானது உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் அமைந்துள்ளது.