2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘மிலன்’ என்ற ஒரு சர்வதேசக் கடற்படைப் பயிற்சியை விசாகப்பட்டினம் நடத்த இருக்கின்றது.
இந்தப் பயிற்சியின் கருப்பொருள் “கடல் முழுவதும் கூட்டு விளைவு” (Synergy Across the Seas) என்பதாகும்.
2021 - 22 ஆம் ஆண்டிற்குள் மண்டல ரயில்வேயிற்கு 1000 மெகாவாட் திறனுள்ள சூரியஒளி மின்சக்தியையும் 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலை மின்சக்தியையும் வழங்க இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இது குழந்தை இறப்பு, குழந்தையின் நோயுற்ற தன்மை, தாய்மார்களின் இறப்பு மற்றும் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு ஆகியவற்றைக் குறைப்பதில் கவனம் செலுத்துகின்றது.
இந்திய ரயில்வே நிறுவனத்தை எரிசக்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக மத்திய ரயில்வே அமைச்சகமும் இங்கிலாந்து அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் மின்சார வாகன மின்னேற்று உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும் இங்கிலாந்து அரசு உதவ இருக்கின்றது.