நாடு முழுவதும் பதிவாகியுள்ள 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்காக மொத்தம் 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை (fast-track special courts - FTSCs) அமைப்பதற்கு 24 மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் ஒன்றிணைந்துள்ளன.
தேசியப் பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தின் (National Mission for Safety of Women - NMSW) ஒரு பகுதியாக இந்தச் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எல்லைகளின் முக்கிய பகுதிகளில் வெட்ட முடியாத (தகர்க்க முடியாத) எஃகு வேலியை இந்தியா அமைக்க இருக்கின்றது.
முதலாவது எஃகு வேலியானது வங்கதேசத்தின் எல்லைப் பகுதியான அசாமின் சில்ச்சாரில் 7 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட இருக்கின்றது. இந்த வேலி அமைப்பிற்குப் பின்பு அந்த எல்லையானது எல்லைப் பாதுகாப்புப் படையால் ஆய்வு செய்யப்பட இருக்கின்றது.