பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘கர்மயுத்த கிரந்த்’ என்ற ஒரு புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
லடாக்கில் நடைபெற்ற ஏழாவது தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் பெண்கள் கோப்பையை லடாக் அணி வென்றது.
லோக்பால் உறுப்பினரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான நீதிபதி திலீப் பாபாசாகேப் போஷ்லே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியப் போட்டி ஆணையமானது “இந்தியாவில் மின்னணு வணிகம் குறித்த சந்தை ஆய்வு: முக்கியக் கண்டுபிடிப்புகள் மற்றும் குறிப்புகள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மாநில வரி ஆணையர்கள் மற்றும் மத்தியத் தலைமை வரி ஆணையர்கள் ஆகியோர் பங்கேற்ற தேசிய ஜிஎஸ்டி மாநாட்டின் இரண்டாவது பதிப்பானது புது தில்லியில் நடத்தப் பட்டது.