இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான 2020 ஆம் ஆண்டின் அமைச்சர்கள் மட்டத்திலான பாதுகாப்புத் துறை சந்திப்பானது புது தில்லியில் நடைபெற்றது.
மத்தியப் பிரதேச மாநில அரசானது முதன்முறையாக கிராமங்களை வரைபடமிடுவதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த இருக்கின்றது.
இது நில அளவீட்டுப் பணிகளை மாற்ற இருக்கின்றது. இந்த வரைபடமிடுதலானது நேரடியாக அல்லது செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் செய்யப்பட இருக்கின்றது.
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேச நிர்வாகமானது பொதுச் சுகாதார பொறியியல் & நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையை (PHE & IFC - Public Health Engineering and Irrigation and Flood Control Department) ‘ஜல் சக்தித் துறை’ என்று பெயர் மாற்றியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது “AIM-4” என்ற மூலக்கூறைக் கண்டுபிடித்துள்ளது. இது “லூ கெஹ்ரிக் நோய்” என அழைக்கப்படும் “அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்லரோசிஸ்” (ALS - Amyotrophic Lateral Sclerosis) எனப்படும் ஒரு அரிய நரம்பியக் கடத்தல் நோய்க்கு சிகிச்சையளிக்க உதவ இருக்கின்றது.
உலகின் முதலாவது மற்றும் அறிமுகமற்ற பாடகரான லார்ட் ஜே என்பவர் தனது சுயசரிதைப் புத்தகமான “லார்ட் ஜே: லார்ட் ஆஃப் அனானிமிட்டி” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவின் படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 100 அங்கன்வாடி (அல்லது பகல்நேர பராமரிப்பு மையம்) பயனாளிகளில் 7 பயனாளிகள் மட்டுமே நகர்ப் புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.