மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் மேலும் 10 நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை சார்ந்த 10 இணைப்புப் பதவிகள் (defence attaches - DA) உருவாக்கப் படும் என்று அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்தியாவில் 39 மிகப்பெரிய உணவுப் பூங்காக்கள் மற்றும் 298 ஒருங்கிணைந்த குளிர் சங்கிலித் தொடர் திட்டங்கள் ஆகியவற்றிற்கு மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா (Pradhan Mantri Kisan Sampada Yojana - PMKSY) என்ற திட்டத்தின் கீழ் உணவுப் பூங்காக்கள் மற்றும் குளிர் சங்கிலித் தொடர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளன.
அண்மையில் ஏற்பட்ட புதிய கொரோனா வைரஸ் (Novel Coronavirus - nCoV) பாதிப்பைச் சமாளிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organisation), ஐரோப்பிய ஒன்றியம் (EU - European Union) மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.
இந்தியாவின் எஃகு தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆனது இந்தியக் கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் ராஜேந்திர பந்த்தை அதன் விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
அமெரிக்க - கிரேக்கப் பொருளாதார நிபுணரும் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுனருமான பினெலோபி கௌஜியானோ கோல்ட்பர்க் (57 வயது) என்பவர் தனது பதவி விலகலை (ராஜினாமா) அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில முதல்வரான உத்தவ் பால் தாக்கரே, பத்திரிகைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக மூத்தப் பத்திரிகையாளரான தின்கர் கேசவ் ராய்கர் என்பவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.
ஜெஃப் வெய்னர் என்பவர் லிங்கிடின் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக உருவெடுத்துள்ளார்.
லிங்கிடின் ஆனது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு தொழில்முறை வலையமைப்பு நிறுவனம் ஆகும்.
டஃப் & பெல்ப்ஸ் நிறுவனமானது 2019 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற விளம்பரத் தூதர் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.