பாபா அணு ஆராய்ச்சி மையமானது பாபா கவசம் என்ற புதிய குண்டு துளைக்காத கவச ஆடையை உருவாக்கியுள்ளது.
இந்தக் கவச ஆடைகளை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் (Central Industrial Security Force - CISF) பயன்படுத்த உள்ளனர்.
கேரளாவில் புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் விலையானது மாநில அரசினால் லிட்டருக்கு ரூ.13 என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீரை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்து இந்த விலைக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுகின்றது.
ஆயுஷ்மான் பாரத் - சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் கீழ் இந்திய அரசு பள்ளி சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகங்களால் கூட்டாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரவாசிய பாரதிய மையம் மற்றும் வெளிநாட்டு சேவை நிறுவனம் முறையே சுஷ்மா ஸ்வராஜ் பவன் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.