2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த அறிவிப்பானது அமெரிக்காவைச் சேர்ந்த கொள்கை வகுக்கும் குழுவான உலக மக்கள் தொகை மதிப்பாய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
சென்னையில் ஆரக் காற்றுருளைகளைத் தயாரிப்பதற்காக முன்னணி இந்திய டயர் உற்பத்தியாளரான சியட் என்ற நிறுவனத்தின் 6வது புதிய தொழிற்சாலையை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.