சமீபத்திய ஓங்கில்கணக்கெடுப்பின் போது ஒடிசாவின் பிதர்கனிகா தேசியப் பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள கஹிர்மாதா கடற்கரைப் பகுதி ஆகியவற்றில் அருகிவிட்ட இனமான ஓங்கில்களின் (டால்பின்) எண்ணிக்கையானது 62 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 126 ஆக இருந்தது.
சர்வதேசக் துருவக் கரடி தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 27 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது புவி வெப்பமடைதல் காரணமாக துருவக் கரடிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கவனத்தை ஈர்க்கின்றது.
இந்தியாவின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடான “RAISE 2020: சமூக அதிகாரமளிதலுக்கான AIன் பொறுப்பு” ஆனது ஏப்ரல் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ளது.
எகிப்தின் எதேச்சதிகார ஆட்சியாளரான (1981 முதல் 2011 வரை) ஹோஸ்னி முபாரக் என்பவர் சமீபத்தில் காலமானார்.
அந்த நாட்டுக் குடிமக்களின் எதிர்ப்பின் விளைவாக 2011 ஆம் ஆண்டில் இவர் எகிப்தின் ஆட்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் மீன்களின் தசை செல்களில் வாழும் ஹென்னெகுயா சால்மினிகோலா என்ற ஒரு ஒட்டுண்ணியை இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.