நச்சுயிரியல் வல்லுநர் மினல் தகவே போஸ்லே என்பவரால் இந்தியாவின் முதல் கரோனா வைரஸ் சோதனைக் கருவியை மதிப்பீட்டிற்காக வழங்க முடிந்தது. புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரி என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவராக அவர் உள்ளார்.
வட மாசிடோனியா நாடானது அதிகாரப் பூர்வமாக நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) இராணுவக் கூட்டணியில் 30வது உறுப்பினராக இணைந்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், மாசிடோனியாவும் கிரேக்கமும் இணைந்து மாசிடோனியாவை வடக்கு மாசிடோனியக் குடியரசு என்று பெயர் மாற்ற ஒப்புக் கொண்டன.