சமீபத்தில் ஒடிசா மாநில அரசு யுனிசெப் அமைப்புடன் இணைந்து (ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் – UNICEF/ United Nations Children’s Funds) “மோ பிரதிவா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
ரூர்க்கியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது “பிராண வாயு” என்று அழைக்கப்படும் குறைந்த செலவுடைய மற்றும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு செயற்கை சுவாசக் கருவியை மேம்படுத்தி உருவாக்கியுள்ளது.
இந்திய உணவுக் கழகமானது (FCI - Food Corporation of India) 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 அன்று ஒரே நாளில் 1.93 இலட்சம் டன்கள் உணவு தானியங்களை இடம் மாற்றச் செய்து அதனை மாநிலங்களுக்கு வழங்கி சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
ஸ்பெயின் அரசானது கரோனா வைரசினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக நாடு தழுவிய அளவில் அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கும் முதலாவது ஐரோப்பிய நாடு இதுவாகும்.