டாடா பவர் நிறுவனத்தின் டாகா முன்னெடுப்பானது 1.2 இலட்சம் முகமூடிகளை உற்பத்தி செய்து மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் விநியோகித்துள்ளது.
இந்தியாவில் எந்தவொருப் பெரு நிறுவனத்தினாலும் மேற்கொள்ளாத வகையில் அதிக அளவில் முகமூடிகளை விநியோகிப்பது இதுவே முதன்முறையாகும்.
மத்திய உள்துறை அமைச்சகமானது நாடு முடக்கத்திலிருந்து மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்புத் தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது.
ஆரம்பத்தில் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் விலக்கு அளிக்கப் பட்டது.
ஐரோப்பிய ஒன்றியமானது ஐரோப்பா முழுவதும் கொரானா நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கையாளுவதற்காக €500 மில்லியன் என்ற அளவிற்கு ஒரு கொரானா மீட்பு நிதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
யூரோ மண்டல கடன் நெருக்கடிப் பிரச்சனையின் போது உருவாக்கப்பட்ட பிணை எடுப்பு நிதியான ஐரோப்பிய நிலைத் தன்மை செயல்முறையின் கீழ் உள்ள மொத்தம் €240 பில்லியன் நிதியைப் பெறுவதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் கோரலாம்.
இந்தியா விசாகப்பட்டினம் (1.3 மில்லியன் டன்கள்), படூர் (2.5 மில்லயன் டன்கள்) மற்றும் மங்களூர் (1.5 மில்லியன் டன்கள்) ஆகிய 3 இடங்களில் யுக்திசார் பெட்ரோலிய சேமிப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது “பாரத் பதே நிகழ்நேரப் பிரச்சாரம்” என்ற ஒரு வார கால அளவுள்ள பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது இந்தியாவில் நிகழ்நேர (ஆன்லைன்) கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதராஸ் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான V. கனகராஜ் என்பவர் ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் N. ரமேஷ் குமார் என்பவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கிய பின்பு இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசானது ஏப்ரல் 7 ஆம் தேதியன்று மயிலாடுதுறையை (தலைநகர் – மயிலாடுதுறை) மாநிலத்தின் 38வது மாவட்டமாகக் அதிகாரப் பூர்வமாகப் பிரித்து, அதற்கான ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய மாவட்டமானது நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப் பட்டதாகும்.