ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சஞ்சய் கோத்தாரி என்பவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக ராஷ்டிரபதி பவனில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாசா அமைப்பானது பிரத்தியேகமாக கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு புதிய செயற்கை சுவாசக் கருவியை வடிவமைத்துள்ளது.
இந்த சுவாசக் கருவியானது விட்டல் (VITAL - Ventilator Intervention Technology Accessible Locally) அல்லது “செயற்கை சுவாசக் கருவி இடைமுகத் தொழில்நுட்ப உள்ளக அணுகல்” என்று அழைக்கப் படுகின்றது.