மொத்தமுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கோவிட் – 19 தொற்று நோயற்ற மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
மேகாலயா, அசாம் மற்றும் மிசோரம் ஆகிய 3 இதர மாநிலங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
சவுதி அரேபியாவானது குழந்தைகளின் மீதான குற்றங்களுக்காக கசையடியை ஒரு மரண தண்டனையாக அறிவிப்பதை ஒழித்துள்ளது.
தற்பொழுது நீதிபதிகள் அதற்கான மாற்று வழி முறையாக அபராதங்கள், சிறைத் தண்டனைகள் மற்றும் பாதுகாவலற்ற சிறைத் தண்டனைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிலவின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு வரைபடமானது மெய் நிகர் வடிவில் (1:5,000,000 என்ற அளவில்) அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS - United States Geological Survey), தேசிய விண்வெளிப் பயண மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA - National Aeronautics and Space Administration) மற்றும் நிலவுக் கோள் நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
இது நிலவின் முதலாவது டிஜிட்டல், ஒருங்கிணைந்த, உலகளாவிய நிலப்பரப்பு வரைபடம் ஆகும்.
புனேவில் உள்ள தடுப்பு மருந்து நிறுவனமான இந்தியக் குருதி ஊனீர் நிறுவனமானது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் மேம்படுத்தப்பட்ட கோவிட் – 19 தடுப்பு மருந்தின் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.
ஏற்கெனவே இந்த நிறுவனம் இதற்கு முன்பு மலேரியா நோய்த் தடுப்பு மருந்து திட்டத்திற்காக, தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் உலகளாவிய 7 நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்ளது.