சமீபத்தில் இடப்பெயர்வு மற்றும் வளர்ச்சிக் குறிப்பு அறிக்கையானது உலக வங்கியின் கீழ் இயங்கும் இடப்பெயர்வு, தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புதல் பிரிவு மற்றும் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற அமைப்பினால் தயாரிக்கப்பட்டு, வெளியிடப் பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையமானது (AAI - Airport Authority of India) திருச்சி சர்வதேச விமான நிலையத்தை வகை-I என்ற பிரிவிலிருந்து வகை-II என்ற பிரிவிற்கு மேம்படுத்தி உள்ளது.
அதே சமயத்தில் தூத்துக்குடி, பிரயாக்ராஜ், ஜபல்பூர், ஹீப்ளி மற்றும் கோரக்பூர் போன்ற விமான நிலையங்கள் வகை-IV என்ற பிரிவிலிருந்து வகை-III என்ற பிரிவிற்கு மாற்றப் பட்டு உள்ளது.
சுவீடன் நாடானது கொரான வைரஸ் தொற்றைக் கையாளுவதற்கு மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி என்ற அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தை (JNCASR - Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அல்சைமர் நோய்க்காக ஒரு இயற்கைப் பொருளை (மருந்து) கண்டறிந்துள்ளனர்.
பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பெர்பெரைன் என்ற பொருளானது பெர்-டி ஆக மாற்றப்படுகின்றது.
இயந்திர மனிதச் சாதனமான மருத்துவமனை நல உதவி இயந்திர மனிதச் சாதனம் (HCARD - Hospital Care Assistive Robotic Device) ஆனது முன்கள சுகாதார நலப் பணியாளர்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
இது மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் அமைந்துள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கோவிட் – 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.
இந்த அமைப்பின் சுழற்சி முறைத் தலைவரான ரஷ்யாவினால் இந்தக் காணொலிக் கருத்தரங்கு நடத்தப்பட இருக்கின்றது.