மணிப்பூரின் சக்-ஹாவ் என்று அழைக்கப்படும் கருப்பு அரிசி, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் களிமண் பொம்மைகள் (டெரகோட்டா) மற்றும் கோவில்பட்டியின் கடலை மிட்டாய் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
2004-05 ஆம் ஆண்டில், டார்ஜிலிங் தேநீருக்கு இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
தேசிய உள்கட்டமைப்புத் தொடர் (National Infrastructure Pipeline) குறித்த அதானு சக்கரவர்த்தி தலைமையிலான பணிக்குழு தனது இறுதி அறிக்கையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
2025 நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் இலக்கை நிறைவேற்றுவதில் தேசிய உள்கட்டமைப்புத் தொடரானது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.
இந்தியாவின் பஹால் திட்டத்திற்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சர்வதேச மேம்பாட்டிற்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனமானது அறிவித்துள்ளது.
பஹால் என்பது மலிவான சுகாதார அணுகல் மற்றும் நீண்ட ஆயுளுக்கான ஒரு கூட்டாண்மை ஆகும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகமாக கருதப்படும் மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு நிறுவனமானது, “அதுல்யா” எனப்படும் நுண்ணலை உயிர்க்கொல்லியை வடிவமைத்துள்ளது.
கோவிட்-19 வைரஸை சிதையச் செய்ய இது பயன்படுத்தப் படுகிறது.
கோவிட்-19 மீது கவனம் செலுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக் குழுவானது YASH என்பதை அறிமுகப் படுத்தியுள்ளது.
YASH (Year of Awareness on Science and Health) – என்பதன் விரிவாக்கம் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆண்டு என்பதாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமானது சந்திரனில் தரையிறங்குவதற்கான புதிய முறைகளை உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ், ப்ளூ ஆரிஜின் மற்றும் டைனடிக்ஸ் ஆகிய மூன்று விண்வெளி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை சந்திரனுக்குக் கொண்டுச் செல்லும்.