இந்திய ரயில்வேயானது பொது முடக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் பொது மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டு வருவதற்காக ஷ்ராமிக் சிறப்பு இரயில் சேவைகளைத் (Shramik Special trains) தொடங்கியுள்ளது.
கிசான் சபா செயலியானது சிஎஸ்ஐஆர் – தில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CSIR – CRRI/Central Road Research Institute) தொடங்கப் பட்டுள்ளது.
இது விவசாயிகளை விநியோகச் சங்கிலியில் இணைப்பதற்கும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் இணைப்பதற்கும் வேண்டி பணியாற்றுகின்றது.
திக்ரி பெக்ரா என்பது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஒரு சமுதாயக் காவல் முறையாகும்.
இந்த மாநிலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தீவிரவாத இயக்கங்களின் எழுச்சிக்குப் பிறகும் காலா கச்சாக் குழுவின் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் வேண்டி இது தொடங்கப் பட்டது.