வழக்கமாக லோகஸ்ட் என்ற வெட்டுக் கிளிகள் ஜூலை-அக்டோபர் மாதத்தில் தான் வரும். ஆனால் இவை தற்போது அதற்கு முன்னரே இராஜஸ்தானில் கண்டறியப் பட்டுள்ளன.
இவை (Locusts) சிறிய அளவு மூக்கைக் கொண்ட ஒரு வகை வெட்டுக்கிளி இனமாகும்.
ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (AIIB - Asian Infrastructure Investment Bank) இந்தியாவினால் தொடங்கப்பட்டுள்ள “கோவிட் – 19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலைத் திட்டத்திற்காக” 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது தேசிய சுகாதாரத் திட்டம், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றினால் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகமானது இந்திய விமானப் படையின் 37 விமானத் தளங்களின் கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதற்காக டாடா பவர் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட நச்சுயிரியல் மையமானது சர்வதேச மருத்துவ நச்சுயிரியலாளர்கள் மன்றமான புகழ்பெற்ற உலகளாவிய வைரஸ் அமைப்பிற்கான (GVN - Global Virus Network) உறுப்பினர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
புகழ்பெற்ற GVN அமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தைப் பெறும் நாட்டின் முதலாவது நிறுவனம் இதுவாகும்.
ஜார்க்கண்ட் மாநிலமானது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறை, 2011 என்ற விதிமுறையின் கீழ் அடுத்த 1 ஆண்டுக் காலத்திற்கு மக்னீசியம் கார்பனேட்டைக் கொண்டுள்ள பான் மசாலாவின் உற்பத்தி, விற்பனை மற்றும் கையிருப்பு நிலைக்குத் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து பான் மசாலா மீது தடை விதித்த 3வது மாநிலம் ஜார்க்கண்ட் ஆகும்.
தமிழ்நாடு அரசானது இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.
இது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளில் கோவிட் - 19 நோய்த் தொற்று ஏற்படுத்திய ஒட்டு மொத்த உடனடித் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றது.
சீனாவைக் குறிக்கும் விதமாக கொரானா நோய்ப் பாதிப்பானது இரண்டாம் உலகப் போரின் போது பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய தாக்குதல் அல்லது 9/11 தீவிரவாதத் தாக்குதல் ஆகியவற்றை விட மிக அதிகமாக அமெரிக்காவை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
“மகாகவச் செயலி” என்ற ஒரு நிகழ்நேர எண்முறை அல்லது டிஜிட்டல் தொடர்பு கண்காணிப்புச் செயலியானது மகாராஷ்டிரா அரசினால் தொடங்கப் பட்டுள்ளது.
இது நோய்த் தொற்று தொடர்பைக் கண்காணித்தல், புவியியல் ரீதியாக பாதுகாப்பு அரண் அமைத்தல், தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் – 19 நோயாளிகளைக் கண்காணிப்பதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு உதவுதல் மற்றும் பங்களிப்பு அளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள குடிமக்களை அனுமதிக்கின்றது.