ரிக்டர் அளவுகோலில் 5.5 என்று பதிவாகிய ஒரு நிலநடுக்கமானது மணிப்பூர் மாநிலத்தைத் தாக்கியுள்ளது.
தேசிய நிலநடுக்க மையத்தின்படி, இந்த நிலநடுக்கமானது மணிப்பூரின் மொய்ராங்கிற்கு தென் மேற்கில் 13 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
சமீபத்தில் “புனிட்டஸ் சாண்க்டஸ்” என்ற ஒரு புதிய சிறிய நன்னீர் வாழ் மீன் இனமானது தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் கண்டறியப் பட்டது.
இது பொதுவாக கேரளாவில் “பரல்” என்றும் தமிழ்நாட்டில் “கெண்டை” என்றும் அழைக்கப் படுகின்றது.
உத்தரப் பிரதேச மாநில அரசானது பொது முடக்கத்தின்போது அம்மாநிலத்திற்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றிய தனது முதலாவது திறன் தகவல் அமைப்பை வெளியிட்டுள்ளது.
அவர்களின் திறன் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து அம்மாநிலத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.