ஐக்கிய நாடுகள் ஜுன் 01 ஆம் தேதியை உலகப் பெற்றோர்கள் தினமாகப் பறை சாற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2012 ஆம் ஆண்டு முதல் ஜுன் 01 ஆம் தேதியை உலகப் பெற்றோர்கள் தினமாக அறிவித்துள்ளது.
“என் வாழ்க்கை என் யோகா” போட்டி என்பது ஒரு காணொளி வலைப் பதிவகப் போட்டியாகும்.
இது மத்திய ஆயுஷ்துறை அமைச்சகம் மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகள் ஆணையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
கோவிட் – 19 ஆனது நாட்டின் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களால் கையாளப்பட்ட முதலாவது தேசிய அளவிலான இந்திய உயிரியல் பேரிடராகும்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மத்திய உள்துறை அமைச்சத்தினால் வழங்கப்பட்டுள்ள விரிவான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தங்களுக்குத் தகுந்த விதிகளை அதற்காக வேண்டி வகுத்துக் கொள்ளலாம்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT - Information Tecchnology) அமைச்சகம் & IT தொழிற்துறை அமைப்பான “நாஸ்காம்” ஆகியவை இணைந்து இந்தியாவின் தேசிய செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் தளமானது செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளின் வளர்ச்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“PM CARES” நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் “ஒரு பொதுத் துறை ஆணையம் அல்ல” என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
எனவே RTI சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் இந்த நிதி குறித்து எந்தவொரு தகவலையும் வழங்க மறுக்கலாம்.